மணலுடன் டிப்பர் லாரி பறிமுதல்

சாத்தூர் அருகே அய்யம்பட்டி பஸ்ஸ்டாப் அருகே தாலுகா காவல்நிலைய எஸ்ஐ சுந்தரராஜ் தலைமையில் போலீசார் வாகனச்சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது. சிறிது தூரத்தில் போலீசாரை பார்த்த டாரஸ் டிப்பர் லாரி டிரைவர் வண்டியை நிறுத்தினார் இதன் பின் லாரியில் இருந்த மணலை கீழே கொட்ட வாகனத்தை தூக்கிவிட்டு டிரைவரும், லாரியின் உரிமையாளரும் தப்பியோடி விட்டனர். உடனே 11/2 யூனிட் மணலுடன் லாரியை பறிமுதல் செய்த போலீசார். தப்பியோடிய டிரைவர் மற்றும் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த லாரி உரிமையாளர் சுந்தரராஜனை தேடி வருகின்றனர்.

Related Stories: