v மணல் லாரி பறிமுதல்

புதுக்கோட்டை, மார்ச் 1: புதுக்கோட்டை அருகே  முறையான அனுமதி சீட்டு இல்லாமல் மணல் ஏற்றி வந்த லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர். தூத்துக்குடி புவியியல் மற்றும் சுங்கத்துறை உதவி இயக்குனர் பூரணவேல் புதுக்கோட்டை அருகே உள்ள உப்பாற்று பாலத்தின் அருகில் வாகனங்களை ஆய்வு செய்தார். அப்போது மணல் ஏற்றிக்கொண்டு தூத்துக்குடியில் இருந்து நெல்லை நோக்கி வந்து கொண்டிருந்த லாரியை புதுக்கோட்டை உப்பாற்று பாலத்தின் அருகே மறித்து ஆய்வு செய்தார். அதிகாரியை பார்த்ததும் டிரைவர் லாரியை நிறுத்தி விட்டு தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து அதிகாரி பூரணவேல், லாரியை ஆய்வு செய்தபோது முறையான சீட்டு இல்லாமல் மணல் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து லாரியை பறிமுதல் செய்து புதுக்கோட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். இது குறித்து புதுக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து லாரிடிரைவரை தேடி வருகின்றனர்.

Related Stories: