அவதூறாக பேசியவர்கள் மீது வழக்கு

பெரியகுளம், மார்ச் 1: பெரியகுளத்தில் இரண்டு பெண்களை அவதூறாக பேசியவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். பெரியகுளத்தில் உள்ள நேரு நகர் காளியம்மன்கோயில் தெருவைச் சேர்ந்தவர் நிவேதா (21). இவரது பெரிய மாமியார் நாச்சியம்மாள், அவருடன் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை அதே தெருவைச் சேர்ந்த நடராஜன் (51), தென்கரை பட்டாளம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த முடியன் (50) ஆகியோர் சேர்ந்து நிவேதாவையும், அவரது பெரிய மாமியார் நாச்சியம்மாளையும் குடிபோதையில் அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. நிவேதா கொடுத்த புகாரின்பேரில், பெரியகுளம் வடகரை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: