திண்டுக்கல் வடமலையான் மருத்துவமனையில் இதய பரிசோதனை ஆய்வக வசதி

திண்டுக்கல்:  திண்டுக்கல்லில் வடமலையான் மருத்துவமனை சார்பில் முதன்முறையாக இதய பரிசோதனைக்கான அதிநவீன ஆய்வக வசதி துவங்கப்பட்டது.  இதய பரிசோதனைக்கான அதநவீன ஆய்வகத்தை தமிழ்நாடு மெடிக்கல் கவுன்சில் தலைவர் டாக்டர் செந்தில் துவக்கி வைத்தார். சுகாதார சேவைத்துறை இணை இயக்குநர் டாக்டர் சிவகுமார் வாழ்த்துரை வழங்கினார். வடமலையான் மருத்துவமனை தலைவர், நிர்வாக இயக்குநர் டாக்டர் வி.புகழகிரி வரவேற்றார். துணை நிர்வாக இயக்குநர் சந்திரா புகழகிரி, டாக்டர்கள் அஸ்வின், சீனிவாசன், ஜோசப் கிறிஸ்டோபர் பாபு, வீரமணி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். வடமலையான் மருத்துவமனை டாக்டர் கார்த்திகேயன் நன்றி கூறினார்.

Related Stories: