மனைவி தற்கொலை ஆசிரியருக்கு சிறை

மதுரை, பிப். 25:மதுரை, திருமங்கலத்தை சேர்ந்தவர் பாண்டியராஜ் (45). ஆசிரியர். இவரது மனைவி திவ்யா. தபால் ஊழியர். 2 பிள்ளைகள் உள்ளனர்.  கணவன், மனைவியிடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டது. இதில் மனமுடைந்த திவ்யா, கடந்த 24.5.2015ல் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். திருமங்கலம் டவுன் போலீசார் வழக்குப்பதிந்து பாண்டியராஜை கைது செய்தனர். இவ்வழக்கின் விசாரணை மதுரை மகளிர் நீதிமன்றத்தில் நடந்தது. இருதரப்பு வாதங்கள் முடிந்த நிலையில் நீதிபதி கிருபாகரன் மதுரம் நேற்று மனைவியின் தற்கொலைக்கு கணவர் தான் காரணம் எனக்கூறி அவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

Related Stories: