வேலூர், பிப்.24:அரசு ஊழியராக பதவி வழங்கக்கோரி 2வது நாளாக அங்கன்வாடி ஊழியர்கள் வேலூர் கலெக்டர் அலுவலகம் எதிரே காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.வேலூர் கலெக்டர் அலுவலகம் எதிரே அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் நேற்று முன்தினம் தொடங்கியது. போராட்டத்திற்கு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் அமிர்தவள்ளி தலைமை தாங்கினார். போராட்டத்தின் போது, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் 110 விதியின் கீழ் அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியராக்குவேன் என அறிவித்ததை தமிழக அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும்.