வேளாங்கண்ணி அருகே புனித செபஸ்தியார் ஆலய தேர்பவனி

நாகை, பிப்.21: வேளாங்கண்ணி அருகே பிரதாபராமபுரம் பாலத்தடியில் பழமைவாய்ந்த புனித செபஸ்தியார் ஆலயம் அமைந்துள்ளது.  ஆலயத்தின் ஆண்டுப் பெருவிழா கடந்த 7ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேர்பவனி நடந்தது. வேளாங்கண்ணி பேராலய பங்குதந்தை அற்புதராஜ் தலைமையில் சிறப்பு திருப்பலி, கூட்டுப்பாடல் பிரார்த்தனை ஆகியவை நடந்தது.இதை தொடர்ந்து மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் மைக்கல்சம்மனசு, புனிதஅந்தோனியார், செபஸ்தியார் எழுந்தருளிய தேர்களுக்கு புனிதநீர் தெளிக்கப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக தேர்பவனி நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். இதைத் தொடர்ந்து வாணவேடிக்கை நிகழ்ச்சியும் நடந்தது.

Related Stories: