மரனா: அரிசோனாவில் விமான நிலையத்தில் சிறிய விமானம் ஒன்று தீப்பிடித்து எரிந்த விபத்தில் இரண்டு பேர் பலியானார்கள். அரிசோனாவில் உள்ள சிறிய விமான நிலையத்தில் நேற்று விமானம் ஒன்று ஓடுபாதையை விட்டு விலகி சென்று தீப்பிடித்தது. இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த இரண்டு பேர் பலியானாதாக போலீசார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்கள் யார் என இன்னும் அடையாளம் காணப்படவில்லை. இந்த விபத்தில்வேறு யாருக்கும் காயம் ஏற்படவில்லை. விபத்துக்கான காரணத்தை கண்டறிவதற்கான விசாரணையை தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் மேற்கொண்டு வருகின்றது.
