ஈரோடு,பிப்.19: ஈரோட்டில் கழிவு நீர் சாக்கடையை தூர்வாரத மாநகராட்சியை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஈரோடு மாநகராட்சி 2ம் மண்டலம் 26வது வார்டு வாசுகி வீதி அருகில் உள்ள காசியண்ண வீதியில் 250க்கும் மேற்பட்ட குடியிருப்புகள், வணிக வளாகங்கள், இரு சக்கர வாகன பழுது நீக்கும் ஓர்க் ஷாப் போன்றவை இயங்கி வருகிறது. இந்த பகுதியில் உள்ள கழிவு நீர் சாக்கடையில் சுற்றுப்புற பகுதியின் கழிவு நீர் வந்து செல்கிறது. இதில், கடந்த 6 மாதமாக பிளாஸ்டிக் குப்பைகள், மது பாட்டில்கள் போன்றவை சாக்கடைகளில் தேங்கி, அடைப்பு ஏற்பட்டு துர்நாற்றம் வீசுகிறது. மேலும், பாதாள சாக்கடையும் இன்னும் இணைப்பு தரராததல் அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வந்தனர். இந்நிலையில், மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் சாக்கடையை தூர்வாராததை கண்டித்தும், உடனடியாக சாக்கடையை மூட வலியுறுத்தி அப்பகுதி மக்கள் 30க்கும் மேற்பட்டோர் மறியலில் ஈடுபட்டனர்.