வீடு புகுந்து பெண்கள் மீது தாக்குதல் நடத்திய போதை வாலிபருக்கு தர்மஅடி

சோமனூர்,ஜன.18:  கோவையை அடுத்த கருமத்தம்பட்டி பகுதியை சேர்ந்தவர் காளிராஜ் இவரது மனைவி கல்பனா(38). இவரது வீட்டின் அருகில் வசிக்கும் தமிழ்மணி என்பவரின் மனைவி சீதா(47). இவர் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் காளிராஜ் வீட்டின் முன்பு நேற்று முன்தினம் மாலை வாலிபர் ஒருவர் போதையில் அமர்ந்திருந்தார். அந்த நபரை விசாரித்த காளிராஜ் தனது வீட்டின் முன்பு அமரக் கூடாது எனவும் வேறு பகுதிக்கு போகும்மாறு எச்சரித்துள்ளார்.இதனையடுத்து கஞ்சா போதை தலைக்கேறிய நிலையில் இருந்த அந்த நபர் காளிராஜை தாக்க முயன்றார். அவர் வீட்டிற்குள் ஓடி விடவே, போதை வாலிபர் வீட்டுக்குள் நுழைந்து, வீட்டில் இருந்த பெண்களை தடியாலும், கற்களாலும் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினர். மேலும் அம்மிக்கல்லை தூக்கி பெண்கள் மீது எறிந்தார்.

இந்நிலையில் கட்டையால் தாக்கியதில் காளிராஜன் மனைவி கல்பனாவின் மண்டை உடைந்தது. அக்கம்பக்கத்தினர் திரண்டு போதை வாலிபரை பிடித்து மின்கம்பத்தில் கட்டிவைத்து தர்ம அடி கொடுத்தனர். பின்னர் அவரை கருமத்தம்பட்டி போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: