தூத்துக்குடி ஸ்டேட் பாங்க் காலனி வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை புதிய ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டு விழா

தூத்துக்குடி,பிப். 17:  தூத்துக்குடி ஸ்டேட் பாங்க் காலனி  தூய வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை புதிய ஆலய அடிக்கல் விழாவில் கத்தோலிக்க ஆயர் ஸ்டீபன் அந்தோனி  அர்ச்சித்து விழாவைத் துவக்கிவைத்தார். இதையொட்டி சிறப்பு பலி உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளுக்கு மறை மாவட்ட முதன்மை குரு பன்னீர்செல்வம், பொருளாளரான  பங்குத்தந்தை சகாயம், ஆயரின் தனிச் செயலாளர்  தினேஸ், ஆலய பங்குத்தந்தை ஜேரோசின் கற்றார் முன்னிலை வகித்தனர். இதைத்தொடர்ந்து ஆயர் மற்றும் பங்குத்தந்தையர்கள் தலைமையில் சிறப்பு திருப்பலி நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து புதிய அடிக்கல் நாட்டப்பட்டு  அர்ச்சிப்பு செய்யப்பட்டதுடன் ஆலய வளாகத்தில்  நினைவுகல் திறந்துவைக்கப்பட்டது.

இதில் இறைமக்கள், அருட்சகோதரிகள், பங்கு பேரவையினர் என திரளானோர் பங்கேற்றனர்.

Related Stories: