திருச்செங்கோடு, பிப்.17: பொருளாதார நிபுணர் ஜெயரஞ்சன் கடந்த 2002ம் ஆண்டு எழுதிய ஒரு ஆய்வு கட்டுரை சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இதில், செங்குந்த மற்றும் வன்னியர் குல பெண்களைப் பற்றி இழிவுபடுத்தி எழுதப்பட்டதாக கூறி, ஜெயரஞ்சனை கைது செய்ய வலியுறுத்தி திருச்செங்கோட்டில் தேசிய மக்கள் சிந்தனை பேரவை அமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் கலந்துகொண்டு பேசினார்.