சென்னை: திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி அமமுகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக வந்த தகவலை அடுத்து, கட்சி அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற அதிமுக தொண்டரால் பரபரப்பு ஏற்பட்டது. இந்தத் தொகுதி அதிமுகவுக்குதான் ஒதுக்க வேண்டும் எனக் கூறி முன்னாள் அமைச்சர் வீரமணியை கண்டித்து முழக்கம் எழுப்பினர்.
