ரூ.7 ஆயிரம் கோடி மதிப்பில் 5 ஆண்டுகால பிணைய பத்திரங்கள் 24ல் ஏலம்: நிதித்துறை செயலாளர் அறிவிப்பு

 

சென்னை: தமிழ்நாடு நிதித்துறை செயலாளர் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு அரசு மொத்தம் ரூ.7000 கோடி மதிப்பில் 5 ஆண்டுகால பிணையப் பத்திரங்கள் ரூ.1000 கோடி, 7.28 சதவீத தமிழ்நாடு அரசு பிணையப் பத்திரங்கள் 2033 ரூ.1000 கோடி மறுவெளியீடு, தமிழ்நாடு அரசின் 9 ஆண்டுகால பிணையப் பத்திரங்கள் ரூ.1000 கோடி, தமிழ்நாடு அரசின் 10 ஆண்டுகால பிணையப் பத்திரங்கள் ரூ.2000 கோடி, தமிழ்நாடு அரசின் 7.63 சதவீத பிணையப் பத்திரங்கள் 2056 ரூ.2000 கோடி மறுவெளியீடு ஏலத்தின் மூலம் விற்பனை செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது.

இந்த ஏலம் இந்திய ரிசர்வ் வங்கியால், மும்பையில் உள்ள அதன் மும்பை கோட்டை அலுவலகத்தில் வரும் 24ம் தேதி நடத்தப்படும். போட்டி ஏலக் கேட்புகள் காலை 10.30 மணியிலிருந்து 11.30 மணிக்குள்ளாகவும், போட்டியற்ற ஏலக் கேட்புகள் காலை 10.30 மணியிலிருந்து 11 மணிக்குள்ளாகவும் இந்திய ரிசர்வ் வங்கியின் ஒருங்கிணைந்த வங்கி சேவை முறையில் மின்னணு படிவத்தில் வரும் 24ம் தேதி சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

Related Stories: