திண்டுக்கல் அருகே வீடு புகுந்து நகை பறித்த வழக்கில் மேலும் இருவர் கைது

 

திண்டுக்கல், மார்ச் 17: திண்டுக்கல் அருகே வீடு புகுந்து நகை, பணம் பறித்த வழக்கில் மேலும் இருவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். திண்டுக்கல் அரசமர வீதி பகுதியில் வசிப்பவர் செந்தில். கொத்தனார். கடந்த பிப்ரவரி மாதம் இவரது வீட்டில் புகுந்த மர்ம கும்பல், அங்கிருந்த 2 பெண்களை துன்புறுத்தி நகை, பணத்தை பறித்து சென்றது. இதுகுறித்த புகாரின் பேரில் திண்டுக்கல் நகர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மாவட்ட எஸ்பி பிரதீப் உத்தரவின் பேரில் டிஎஸ்பி கார்த்திக் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் வெங்கடாஜலபதி உள்ளிட்டோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

Related Stories: