சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி நேற்று வெளியிட்ட அறிவிப்பு: அதிமுக ஆட்சி மன்றக் குழு திருத்தி அமைக்கப்படுகிறது. ஆட்சி மன்ற குழு தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி. அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், கே.பி.முனுசாமி, திண்டுக்கல் ஐ.சீனிவாசன், எஸ்.பி.வேலுமணி, பா.வளர்மதி, வேணுகோபால், ஜஸ்டின் செல்வராஜ், இன்பதுரை எம்பி ஆகியோர் நியமிக்கப்படுகிறார்கள். கட்சியினர் இவர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சி மன்றக்குழுவில் வழக்கறிஞர் பிரிவு செயலாளரும், எம்பியுமான இன்பதுரையை புதிதாக சேர்த்து அறிவித்துள்ளார்.
