விமான எரிபொருள் விலை உயர்வு காரணமாக டிக்கெட் கட்டணங்களை ஏர் இந்தியா நிறுவனம் உயர்த்துகிறது. நாளை முதல் உள்நாட்டு, சார்க் நாடுகளுக்கான டிக்கெட் கட்டண உயர்வு நடைமுறைக்கு வரும். உள்நாட்டு, சார்க் நாடுகளுக்கான விமான டிக்கெட் கட்டணத்தை ரூ.399 வரை உயர்த்துகிறது. தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான டிக்கெட் கட்டணத்தை சுமார் ரூ.5,000 வரை உயர்த்துகிறது.
வட அமெரிக்கா, ஆஸ்திரேலியாவுக்கான விமான டிக்கெட் கட்டணத்தை ரூ.16,800 வரை உயர்த்துகிறது.
