சந்திர கிரகணத்தை முன்னிட்டு கோயில்களில் நடை அடைக்கப்பட்டது

பெரம்பலூர்,மார்ச் 4: பெரம்பலூர் பெருமாள், சிவன் கோயில்களில் சந்திர கிரகணத்தை முன்னிட்டு நேற்று நடை அடைக்கப்பட்டது. பெரம்பலூர் நகராட்சி துறையூர் சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் திருக் கோவில் மற்றும் நகராட்சி தெப்பக்குளம் கிழக்கே அமைந்துள்ள ஸ்ரீ மரகத வல்லித் தாயார் சமேத ஸ்ரீ மதனகோபால சுவாமி கோயில்களில் நேற்று சந்திர கிரகணத்தை முன்னிட்டு நடை அடைக்கப்பட்டு சந்திர கிரகணம் முடிந்தவுடன், சந்திர கிரக தோஷ பரிகார பூஜைகள் நடைபெற்றன.

பின்னர் பக்தர்கள் வழக்கம் போல் கோயில்களில் அனுமதிக்கப்பட்டனர். சந்திர கிரகமானது மாலை 3.19 முதல் இரவு 6.47 வரை நீடித்தது. பரணி, பூரம், பூராடம், மகம், உத்திரம், ஆயில்யம். நட்சத்திரக்காரர்கள் இன்று (4ஆம்தேதி) காலை கோயிலில் பரிகார பூஜைகளை மேற்கொண்டு கூடுதல் பயன்பெற அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அனைவரும் நீராடி இரவு உணவு உட்கொள்வது பஞ்சாங்கம் மற்றும் வேத சாஸ்திரங்களின்படி அறிவுரைகள் அறிவுறுத்தப்பட்டது.

 

Related Stories: