திமுக இளைஞரணி சார்பில் ஏழைளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்

பாபநாசம், பிப். 10: பாபநாசம் சட்ட மன்றத்தொகுதி திமுக இளைஞரணி சார்பில் ஏழை மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா பாபநாசம் அடுத்த கபிஸ்தலத்தில் நடைபெற்றது. விழாவில் இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் குட்டி தெட்சணாமூர்த்தி, மாவட்ட துணைச் செயலாளர் அய்யாராசு, மாவட்ட செயலாளர் கல்யாண சுந்தரம் ஆகியோர் பேசினர். இதில் பாபநாசம் ஒன்றிய நிர்வாகிகள் தாமரைச் செல்வன், யூசுப் அலி, கருணாகரன், வில்பர்ட் ராஜா, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் துரை முருகன் உள்பட ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.

Related Stories: