சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கூடுதல் குற்றப்பத்திரிகையை விசாரணைக்கு எடுத்ததை எதிர்த்து செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். தங்கள் தரப்பு வாதத்தை கேட்காமல் கூடுதல் குற்றப்பத்திரிகையை முதன்மை அமர்வு நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்தது என மனுத்தாக்கல் செய்துள்ளார். அசோக்குமார் வழக்கில் அமலாக்கத் துறைக்கு நோட்டீஸ் அனுப்ப தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா அமர்வு உத்தரவிட்டுள்ளது. செந்தில்பாலாஜி சகோதரர் தொடர்ந்த வழக்கின் விசாரணையை மார்ச் 4ஆம் தேதிக்கு ஒத்திவைத்து ஐகோர்ட் உத்தரவிட்டது.
