காதலர் தின சிறப்பு ரத்ததான முகாம்

மதுரை, பிப். 16: இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில், காதலர் தினத்தை முன்னிட்டு ரத்ததான முகாம் ஜெய்ஹிந்துபுரம் பகுதியில் மாவட்டத் தலைவர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. மாநகராட்சி துணை மேயர் நாகராஜன், சமூக ஆர்வலர் கௌசல்யா, குருதிக் கொடையாளர் வரதராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சாதி, மத வேறுபாடு பார்க்காமல். மனித உயிர்களை ரத்தம் காக்கும் என்பதால், சாதி மறுப்பின் அடையாளமாக நடைபெற்ற இதில், திரளான இளைஞர்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டு ரத்ததானம் செய்தனர்.

 

 

Related Stories: