புதுடெல்லி: டெல்லியில், காமன்வெல்த் நீதித்துறை கல்வியாளர்களின் 11வது கூட்டத்தை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் தொடங்கி வைத்து பேசியதாவது: வரலாற்றில் மிகவும் மதிக்கப்படும் நீதித்துறை தலைவர்கள் குறைபாடற்ற தன்மையையோ அல்லது பரிபூரணத்தையோ வெளிப்படுத்தவில்லை;. அதற்கு பதிலாக, சிறந்த தலைவர்கள் தங்கள் அறிவின் வரம்புகளை உணர்ந்து, பிழையின் சாத்தியக்கூறு குறித்து எச்சரிக்கையாக, எதையும் கற்றுக் கொள்ள தயாராக இருந்தனர். அந்த வகையில், எந்த விதிவிலக்கும் இல்லாமல் ஒவ்வொரு நீதிபதிக்கும் கற்பிக்க வேண்டும் என்று நான் நம்புகிறேன். ஏனெனில் நீண்ட காலமாக நீதிபதிகள் என்பவர் அனைத்து அறிந்தவர், பரிபூரணமானவர், கற்றுக் கொள்ள எதுவும் இல்லாதவர் என்ற கருத்து நடைமுறையில் இருக்கிறது.
எனது கருத்துப்படி, இந்த கண்ணோட்டம் நீதித்துறைக்கு புகழைத் தந்தாலும், அது அதற்கு சேவை செய்யாது. நீதிபதிகள் முழுமையில்லாதவர்களாக இருப்பதால் நீதித்துறைத் தலைமை பாதிக்கப்படுவதில்லை. மாறாக, அவர்கள் தங்களை பரிபூரணமானவர்களாக காட்ட பாசாங்கு செய்யும்போது அது பாதிக்கப்படுகிறது. நீதி நிறுவனங்களைப் போலவே நீதிபதிகளும் வளர்ச்சி, திருத்தம், மேம்பாட்டு திறன் கொண்டவர்களாக இருக்கிறார்கள். நாம் ஒருவருக்கொருவர் கற்றுக்கொள்ளும்போது, நமது முடிவுகள் சட்டத்தால் மட்டுமல்ல, உலகளாவிய நீதித்துறையின் கூட்டு ஞானத்தாலும் உறுதிப்படுத்தப்படுகிறோம். பரஸ்பர கற்றல் என்பது நீதித்துறை வளர்ச்சியின் உயிர்நாடி. இவ்வாறு அவர் கூறினார்.
