புதுக்கோட்டை, பிப். 4: புதுக்கோட்டை மாவட்டத்தில் அண்ணா நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. திமுக சார்பில் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் செல்லப்பாண்டியன் தலைமையில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நகர செயலாளர் நயினா முகமது, முன்னாள் எம்எல்ஏ கவிதைபித்தன், சந்திரசேகரன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சண்முகம் பங்கேற்றனர். அதிமுக சார்பில் நகர செயலாளர் பாஸ்கர் தலைமையில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. முன்னாள் எம்எல்ஏ கார்த்திக் தொண்டைமான், செல்லதுரை உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். மதிமுக சார்பில் மாவட்ட பொருளாளர் கலியமூர்த்தி தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. தேமுதிக சார்பில் மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன் தலைமையில் அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.