சென்னை: சென்னையில் ஊழல் புகாருக்கு ஆளான ஜி.எஸ்.டி. ஆணையர் மாணிக்கவேலை ஒன்றிய அரசு சஸ்பெண்ட் செய்தது. ஜி.எஸ்.டி. ஆணையர் மாணிக்கவேலுக்கு எதிராக ஒன்றிய நிதி அமைச்சகத்துக்கு புகார் வந்ததை அடுத்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாணிக்கவேல் மீதான ஊழல் குற்றச்சாட்டு குறித்து சிபிஐ விசாரணை நடத்த ஒன்றிய அரசு பரிந்துரை செய்துள்ளது.
