அவிநாசி, பிப். 4: அவிநாசி அருகே உள்ள சேவூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நேற்று ரூ.4 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம் நடைபெற்றது. அவிநாசி சேவூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நடந்த ஏலத்தில் சென்ற வாரத்தைவிட, நிலக்கடலை வரத்து குறைந்து இருந்தது. இதனால், நிலக்கடலை விலை அதிகரித்தது. நிலக்கடலை ஏலத்திற்கு, மொத்தம் 201 நிலக்கடலை மூட்டைகளை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர்.
