அரியலூர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் கொத்தடிமை தொழிலாளர் ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்பு

 

ஜெயங்கொண்டம், பிப். 10: தமிழகத்தில் ஆண்டுதோறும் 9ம் தேதி கொத்தடிமை தொழிலாளர் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.  இதைமுன்னிட்டு, அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் எஸ்பி விஷ்வேஷ் பா.சாஸ்திரி தலைமையில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் முத்தமிழ்ச்செல்வன் (தலைமையிடம்) முன்னிலையில் கொத்தடிமை தொழிலாளர் ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதன்படி, கொத்தடிமை தொழிலாளர் முறை எந்தத் தொழிலில் இருந்தாலும், அதை அடையாளம் கண்டு தக்க நடவடிக்கை எடுக்க முழு முயற்சி செய்வேன், கொத்தடிமை தொழிலாளர்களை மீட்டு அவர்களின் முழுமையான மறுவாழ்வுக்காக பணி
யாற்றுவேன்.

Related Stories: