ஈரோடு : தெருநாய்கள் கடித்து உயிரிழக்கும் ஆடுகளுக்கு இழப்பீடு தரப்படும் என்று அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார். ஈரோட்டில் அமைச்சர் முத்துசாமி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ” டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில்களை திரும்பப் பெற ஏஜென்சி நியமிக்கப்படவுள்ளது. காலி மதுபாட்டில்களை திரும்ப பெறுவது தொடர்பாக நீதிமன்ற வழிகாட்டுதல்படி நடவடிக்கை எடுக்கப்படும்,”இவ்வாறு தெரிவித்தார்.
