சென்னை: உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் 10 ஆயிரம் முகாம்கள் நிறைவு பெற்றது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ‘ஆட்சிக்கு வருவதற்கு முன், 234 தொகுதிகளுக்கும் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் கூட்டங்களை நடத்தி மனுக்களை பெற்றோம். புதிய துறையை உருவாக்கி, ஆட்சிப் பொறுப்பேற்ற 100 நாள்களில் 4.57 லட்சம் மனுக்களுக்கு தீர்வு கண்டோம்’ எனவும் முதலமைச்சர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
