சென்னை எழும்பூரில் போராட்டத்தில் ஈடுபட்ட டாஸ்மாக் பணியாளர்கள் 500 பேர் கைது

சென்னை: சென்னை எழும்பூரில் போராட்டத்தில் ஈடுபட்ட டாஸ்மாக் பணியாளர்கள் 500 பேர் கைது செய்யப்பட்டனர். இந்திய கம்யூ. மூத்த தலைவர் முத்தரசன், ஏ.ஐ.டி.யூ.சி. டாஸ்மாக் பணியாளர் சங்க பொதுச்செயலாளர் தனசேகரன் கைது செய்யப்பட்டனர். பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Related Stories: