பள்ளி மாணவிகளுக்கு இலவச சைக்கிள் குடியாத்தத்தில் படம் உள்ளது

குடியாத்தம், ஜன.30: குடியாத்தத்தில் பள்ளி மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கப்பட்டது. குடியாத்தம் நெல்லூர்பேட்டை அரசு உதவி பெறும் மேல்நிலை பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா நேற்று நடந்தது. பள்ளி செயலாளர் சேகர் தலைமை தாங்கினார். வேலூர் மத்திய மாவட்ட கூட்டுறவு வங்கி தலைவர் ராமு, நகர கூட்டுறவு வங்கி தலைவர் பாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் கோமதி வரவேற்றார். வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க தலைவர் பழனி தலைமை தாங்கி, 19 மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கி சிறப்புரை ஆற்றினார். இதில், குடியாத்தம் அரசு மருத்துவமனை ஆலோசனைக்குழு உறுப்பினர் மூர்த்தி, வேலூர் மாவட்ட நாட்டு நலப்பணித்திட்ட முன்னாள் அலுவலர் விநாயகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் வழக்கறிஞர் ஜெகதீசன் நன்றி கூறுினார்.

Related Stories: