மதுராந்தகத்தில் பிரதமர் நரேந்திர மோடி : ஒரே மேடையில் பழனிசாமி , டிடிவி தினகரன்!!

மதுராந்தகம் : மதுராந்தகத்தில் பிரதமர் நரேந்திர மோடியை என்.டி.ஏ. கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் வரவேற்றனர். பிரதமர் மோடியை எடப்பாடி பழனிசாமி, அன்புமணி, ஜி.கே.வாசன் உள்ளிட்டோர் நேரில் வரவேற்றனர். மதுராந்தகம் தே.ஜ.கூ பொதுக்கூட்டத்தில் பேசிய அதிமுக துணைப் பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி,”2014ல் பிரதமராக பொறுப்பேற்று பின் தங்கிக் கிடந்த இந்திய துணைக் கண்டத்தை இன்று உலகமே வியக்கும் வண்ணம் மாற்றிய தலைவர் பிரதமர் மோடி; உலக பிரச்னைகளுக்கு இந்தியாவில் இருந்து தீர்வு கூறக்கூடிய தலைவராக அவர் இருக்கிறார்,”எனத் தெரிவித்தார்.

Related Stories: