திருமங்கலம், ஜன. 29: திருமங்கலத்தை அடுத்த குன்னத்தூரில், மதுரை-ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு ஜெ.பேரவை சார்பில் கோயில் கட்டப்பட்டுள்ளது. இக்கோயில் திறப்பு விழா குறித்து அமைச்சரும், ஜெ.பேரவை செயலாளருமான ஆர்பி உதயகுமார் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதியில் ஜெயலலிதாவிற்கு கோயில் திறக்கப்பட உள்ளது. நாளை (ஜன.30) முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணைமுதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் அம்மா கோயிலை திறந்து வைக்கின்றனர். இந்த நிகழ்ச்சியில் 234 தொகுதியை சேர்ந்த மூத்த அதிமுக நிர்வாகிகளுக்கு நலத்திட்டங்களும், மதுரை மேற்குமாவட்ட அதிமுகவை சேர்ந்த 120 மூத்த நிர்வாகிகளுக்கு பசும் கன்றும் முதல்வர் வழங்க உள்ளார்.