திருத்தளிநாதர் கோயிலில் பிரதோஷ விழா

திருப்புத்தூர், ஜன.28:  திருப்புத்தூர் சிவகாமி உடனாய திருத்தளிநாதர், யோக பைரவர் கோயிலில் பிரதோஷ விழா நடந்தது. மாலை திருத்தளிநாதர் சுவாமிக்கும், நந்தீஸ்வரருக்கும் பால், சந்தனம், மஞ்சள், தயிர், பன்னீர் உள்ளிட்ட 16 விதமான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து அலங்கார தீபாராதனை நடந்தன. தொடர்ந்து உற்சவர் திருத்தளிநாதரும், சிவகாமி அம்மனும் வெள்ளி ரிஷப வாகனத்தில் பிரதோஷ மூர்த்திகளாக எழுந்தருளினர். பின்னர் பிரதோஷ மூர்த்திகளுக்கு தீபாராதனை நடந்தது. பெண்கள் நெய் தீபம் ஏற்றி தங்களது நேர்த்தி கடனை செலுத்தி வழிபட்டனர். இதில் ஏராளமானோர் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Related Stories: