அரசு கலைக் கல்லூரியில் காவலர் அறை திறப்பு

கூடலூர்,ஜன.28: கூடலூர் ரோட்டரி கிளப் சார்பில், கூடலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் புதிதாக  காவலர் அறை கட்டி கொடுக்கப்பட்டுள்ளது. அதின் திறப்பு விழா நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் முனைவர்நெடுஞ்செழியன் தலைமை தாங்கினார். கூடலூர் ரோட்டரி கிளப் தலைவர் rத்தியநேசன் முன்னிலை வகித்தார். ஓய்வு பெற்ற தாசில்தார் மீனாட்சி சுந்தரம் திறந்து வைத்தார். விழாவில் சண்முகசுந்தரம் வரவேற்றார். மகேஸ்வரன், டாக்டர் வெங்கடேஷ் ஆகியோர் வாழ்த்தி பேசினர். முடிவில் லாரன்ஸ் நன்றி கூறினார்.

Related Stories: