சென்னை: தமிழ்நாட்டில் ஜன.9, 10 ஆகிய இரு நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. ஜன.9ல் மயிலாடுதுறை, திருவாரூர், நாகை, தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. ஜன.10ல் விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகை, தஞ்சை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
