திருப்பூரில் அரசியல் மாற்றம் வேண்டும் என அதிமுக மற்றும் தேசியக்கொடியுடன் டவர் மீது ஏறி போராட்டம்

 

திருப்பூர்: திருப்பூர் தாராபுரம் சாலை வாய்க்கால் மேடு பகுதியில் அரசியல் மாற்றம் வேண்டும் என அதிமுக மற்றும் தேசியக்கொடியுடன் டவர் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது

திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தாராபுரம் சாலை கோவில் வழி அருகே உள்ள பிஎஸ்என்எல் நபர் ஒருவர் 40 அடி உயர டவர் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டார். டவர் மீது ஏறிய நபர் தேசியக்கொடி மற்றும் அதிமுக கொடியை டவர் மீது கட்டி சிஸ்டம் சரியில்லை எனவும் அரசியல் மாற்றம் வர வேண்டும் என வலியுறுத்தி வந்தார்.

தொடர்ந்து திருப்பூர் தெற்கு தீயணைப்புத் துறையினர் மற்றும் நல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். தொடர்ந்து மேலிருந்தவாறு பட்டாசுகளையும் பற்ற வைத்து கீழே எரிந்து வந்துள்ளார். தொடர்ந்து அவரிடம் நிதானமாக பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

மேலிருந்தவாறு கீழே அதிமுக நபருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டவர் தன்னுடைய கோரிக்கை அனைத்து ஊடங்களிலும் ஒளிபரப்பாக வேண்டும், அதிமுக தலைமைக்கு எனது கோரிக்கைகள் சென்று அவர்கள் நிறைவேற்ற முன்வர வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.

தொடர்ந்து அவரிடம் நிதானமாக பேசிய போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் அவரை தானாகவே கீழே இறங்கச் செய்தனர். கீழே இறங்கி வந்தவரிடம் விசாரணை மேற்கொண்ட போது அவர் வாழப்பாடி பகுதியை சேர்ந்த மூக்கையா (42) என்பதும் , திருப்பூர் கோவில் வழி பகுதியில் தங்கி பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார்.

அரசியல் மாற்றம் வர வேண்டும் என வலியுறுத்தினார். தொடர்ந்து அவரை விசாரணைக்காக நல்லூர் போலீசார் காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். சம்பவத்தை தொடர்ந்து இதனை வேடிக்கை பார்க்க நூற்றுக்கணக்கான மக்கள் சம்பவ இடத்தில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

போலீசார் அவர்களை அப்புற படுத்தி டவறின் மீது ஏறி கீழே இறங்கிய மூக்கையா என்பவரை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர் இதனால் அவ்விடத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மூக்கையா கடந்த ஆண்டு ஜனவரி மாதம் இதே போல் தாராபுரம் சாலையில் உள்ள வேறொரு டவரில் மேலே ஏறி இதுபோன்ற பரபரப்பை ஏற்படுத்தியவர் என்பதை குறிப்பிடத்தக்கது.

 

Related Stories: