கொள்ளிடம், ஜன. 24: கொள்ளிடம் அருகே ஆச்சாள்புரம் கிராமத்தில் ஏழு பிடாரி கோயிலில் உண்டியலை திருட முயன்ற 2 பேர், பொதுமக்கள் விரட்டியதால் தப்பியோடினர். இதையடுத்து அவர்கள் வந்த பைக் பறிமுதல் செய்யப்பட்டது.
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே ஆச்சாள்புரம் ஊராட்சியை சேர்ந்த மேலகரம் கிராமம் உள்ளது. இங்கு ஏழு பிடாரி கோயில் உள்ளது. இந்த கோயிலின் முன் பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்காக சில்வர் உண்டியல் வைக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவு 2 வாலிபர்கள் ஒரு மோட்டார் பைக்கில் வந்தனர். பின்னர் கோயி்ல் முன்புள்ள உண்டியலை எடுத்து கொண்டு ஒரே பைக்கில் தப்பிக்க முயற்சி செய்தனர்.