மாவட்டம் முழுவதும் ஜன.24,25ல் கனிமொழி எம்பி தேர்தல் பிரசாரம்

சிவகங்கை, ஜன.21: சிவகங்கை மாவட்டத்தில் ஜன.24 மற்றும் 25ஆகிய இரண்டு நாட்கள் கனிமொழி எம்பி சுற்றுப்பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். திமுக மாவட்ட செயலாளர் கேஆர்.பெரியகருப்பன் எம்எல்ஏ விடுத்துள்ள அறிக்கையில்: திமுக மாநில மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் என்ற தலைப்பில் பல்வேறு மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். சிவகங்கை மாவட்டத்தில் ஜன.24 மற்றும் ஜன.25 ஆகிய இரண்டு நாட்கள் 4 சட்டமன்ற தொகுதிகளில் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்கிறார்.

அவரது நிகழ்ச்சிகள் விபரம் வருமாறு, ஜன.24, ஞாயிறு காலை 8.30 மணி காரைக்குடி அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தல். கல்வியாளர்கள் தொகுதி முக்கிய பிரமுகர்கள் வணிகர்களுடன் கலந்துரையாடல். சாக்கோட்டை கிழக்கு ஊராட்சி ஒன்றியம் சங்கராபுரத்தில் கிராம சபை கூட்டம். கண்ணங்குடி ஒன்றியம் சிறுவாச்சியில் கிராம சபை கூட்டம். தேவகோட்டை வடக்கு ஒன்றியம் திடக்கோட்டையில் வணிகர்கள், விவசாயிகள் சந்திப்பு.

பகல் 12.30 மணி தேவகோட்டையில் பொதுக்கூட்டம். திமுக முன்னாள் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ரூஸோ சிலைக்கு மாலை அணிவித்தல். மதியம் கல்லல் மேற்கு ஒன்றியம் குன்றக்குடியில் பொதுமக்கள் சந்திப்பு. திருப்பத்தூரில் காந்தி சிலைக்கு மாலை அணிவித்தல்.

பொதுமக்கள் வியாபாரிகள் சந்திப்பு. மாலை 3 மணிக்கு திருப்பத்தூரில் மகளிர் குழுவினரை சந்தித்து குறை கேட்டல். மகிபாலன்பட்டி கிராம சபை கூட்டம். உலகம் பட்டியில் மாற்றுத்திறனாளிகளை சந்தித்து குறை கேட்டல். எஸ்.புதூர் ஒன்றியத்தில் விவசாயிகள் சந்திப்பு. இரவு சிங்கம்புணரியில் பொதுக்கூட்டம். ஜன.25 காலை 8:30 மணி கல்லலில் பொதுமக்கள் குறை கேட்டல். காளையார்கோவில் ஒன்றியம் ஆலவிளாம்பட்டியில் சமுதாயக்கூடம் திறப்பு. பொதுமக்கள் சந்திப்பு. சிவகங்கை ஒன்றியம் அலவாக் கோட்டையில் இயற்கை விவசாயிகளுடன் சந்திப்பு.

காளையார்கோவிலில் கிராம சபை கூட்டம். இளையான்குடி ஒன்றியம் இண்டன் குளத்தில் மறைந்த திமுக தொண்டர் லூர்துசாமி வீட்டிற்குச் செல்லுதல். இளையான்குடி நகரில் பொதுக்கூட்டம். சாலைகிராமத்தில் மிளகாய் மற்றும் நெல் விவசாயிகளுடன் சந்திப்பு. கீழநெட்டுர் பொதுக்கூட்டம். மாலை 5.30 மணி மானாமதுரையில் மண்பாண்ட தொழிலாளர்களுடன் சந்திப்பு. ராஜகம்பீரத்தில் மகளிர் சுய உதவிக் குழுவினர் சந்திப்பு. கொம்பு காரனேந்தலில் முன்னாள் அமைச்சர் பசும்பொன் தா.கிருட்டிணன் நினைவிடத்தில் மரியாதை செலுத்தல். இரவு 7.15மணிக்கு திருப்புவனத்தில் பொதுக்கூட்டம். ஆகிய நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related Stories: