கேரளா: கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் வனப் பகுதியில் புலி தாக்கி முதியவர் கூமன் (65) உயிரிழந்தார். விறகு எடுக்க வனத்துக்குள் சென்றபோது புலி தாக்கியதில் கூமன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். சகோதரி கண்முன்னே கூலித் தொழிலாளி துடிதுடித்து இறந்தார். ஆட்கொல்லி புலியை பிடிக்கும் பணியில் வனத்துறை தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
