நெல்லூர் அருகே சரக்கு ரயிலின் கடைசி பெட்டி தடம் புரண்டு விபத்து

 

ஆந்திரா: ஆந்திரா மாநிலம் நெல்லூர் அருகே சரக்கு ரயிலின் கடைசி பெட்டி தடம் புரண்டு விபத்து ஏற்பட்டுள்ளது. டேங்கரை அகற்றி, தண்டவாளத்தை சீரமைக்கும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

ஆந்திரப் பிரதேசத்தின் நெல்லூர் மாவட்டத்தில் சரக்கு ரயில் ஒன்று தடம் விலகியது. அதன் இரண்டு பெட்டிகள் கவிழ்ந்தன. கொம்மரபுடி ரயில் சந்திப்பு அருகே இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. தகவல் கிடைத்ததும், ரயில்வே அதிகாரிகளும் ஊழியர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

பால் ஏற்றுவதற்காக விஜயவாடாவிலிருந்து திருப்பதிக்குச் சென்ற சரக்கு ரயிலின் பெட்டி, மானுபோலு-கொம்மரபுடி ரயில் நிலையத்தில் தடம் விலகியதால், சென்னை-திருப்பதி வழித்தடத்தில் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன. சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், போர்க்கால அடிப்படையில் சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டனர்.

Related Stories: