முதலமைச்சரின் தொலைநோக்கு சிந்தனையுடன் கூடிய கடும் உழைப்பால் வெற்றி மேல் வெற்றி காண்கிறது தமிழ்நாடு: அரசு பெருமிதம்

சென்னை: முதலமைச்சரின் தொலைநோக்கு சிந்தனையுடன் கூடிய கடும் உழைப்பால் தமிழ்நாடு வெற்றி மேல் வெற்றி காண்கிறது என தமிழ்நாடு அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் அறிவுசார் எதிர்காலத்தை வடிவமைக்கும் முன்னணி மாநிலம் தமிழ்நாடு. தொழில் வழிகாட்டி நிறுவனம் வெளியிட்டுள்ள இந்திய காப்புரிமைப் பதிவுகளில் தமிழ்நாடு மாபெரும் வளர்ச்சி அடைந்துள்ளது. மற்ற மாநிலங்களைவிட 23% வளர்ச்சி கண்டு தமிழ்நாடு புதிய சாதனை படைத்துள்ளது. 2021 தொடங்கி தமிழ்நாடு அபரிமிதமான முன்னேற்றங்களை படைத்து மிகச்சிறந்த மாநிலமாக எழுச்சி பெற்றுள்ளது.

 

Related Stories: