2 நாள் பயணமாக நெல்லை புறப்பட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: 2 நாள் பயணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெல்லை புறப்பட்டார். நெல்லை செல்லும் முதல்வருக்கு கட்சி சாா்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. தொடா்ந்து, டக்கரம்மாள்புரத்தில் கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் சாா்பில் ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சியில் பங்கேற்கிறாா்.

பின்னா், நாளை (டிச. 21) காலையில் ரெட்டியாா்பட்டி மலைப்பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பொருநை அருங்காட்சியகத்தை திறந்து வைக்கிறாா். அதைத் தொடா்ந்து, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மைதானத்தில் நடைபெறும் விழாவில் பங்கேற்கும் முதல்வா், அரசு மருத்துவக் கல்லூரி பல்நோக்கு மருத்துவமனையில் ரூ.72.10 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள இதயம், நரம்பியல், சிறுநீரகம் மற்றும் கல்லீரல் சிகிச்சைக்கான மேம்பட்ட கட்டடத்தை திறந்துவைத்து, 44,924 பயனாளிகளுக்கு ரூ.100 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்குகிறாா்.

Related Stories: