பாலாறு பொருந்தலாறு அணையிலிருந்து நாளை முதல் தண்ணீர் திறக்க உத்தரவு!

 

சென்னை: திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டம், பாலாறு பொருந்தலாறு அணையிலிருந்து, தாடாகுளம் கால்வாய் மூலம் பாசனம் பெறும் நிலங்களுக்கு, முதல் போக பாசனத்திற்கு 19.12.2025 முதல் 17.04.2026 வரை 120 நாட்களுக்கு 207.36 மில்லியன் கன அடிக்கு மிகாமல் (நீரிழப்பு உட்பட), தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது. இதனால், திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டம், புதச்சு மற்றும் பாலசமுத்திரம் ஆகிய கிராமங்களிலுள்ள 844 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

 

Related Stories: