செக்கானூரணியில் ஸ்டாலின் பங்கேற்கும் கிராமசபை கூட்ட ஏற்பாடுகள் தீவிரம்

வாடிப்பட்டி/திருமங்கலம், ஜன.19:  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நாளை செக்கானூரணியில் பங்கேற்கும் மக்கள் கிராமசபை கூட்டத்திற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மதுரை வடக்கு, தெற்கு மாவட்ட திமுக சார்பில் திருமங்கலம் தொகுதி அ.கொக்குளம் ஊராட்சி செக்கானூரணியில் நாளை மாலை 4.30 மணிக்கு மக்கள் கிராமசபை கூட்டம் நடைபெறுகிறது. இதற்காக 50 ஆயிரம் பேர் பங்கேற்கும் வகையில் பிரமாண்ட மைதானம் தயாராகி வருகிறது. இரவு, பகலாக நடைபெற்று வரும் பணிகளை மாவட்ட செயலாளர்கள் மூர்த்தி எம்.எல்.ஏ,மணிமாறன் ஆகியோர் பார்வையிட்டனர். அப்போது திமுக நிர்வாகிகள் தனபாண்டியன்,பாலாஜி, சோலை ரவிக்குமார்,  பெரியசாமி, மதன்குமார், மருதுபாண்டி, எஸ்.ஒ.ஆர்.தங்கப்பாண்டியன், பிச்சைமணி, தனுஷ்கோடி, செல்லப்பாண்டி, விமல், ஆதவன் அதியமான் மற்றும் சுதந்திரம், வேட்டையன், முத்துக்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Related Stories: