தென்காசி, ஜன. 19: தென்காசியில் ஜாஸ் பில்டர்ஸ் நிறுவனத்தின் ஜாஸ் ஆர்க் ஸ்டுடியோ கட்டுமான வடிவமைப்பு நிறுவனம் திறப்பு விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு வர்த்தக சங்கங்களின் பேரவை மாநில இணைச்செயலாளரான தொழிலதிபர் வி.டி.எஸ்.ஆர். முகமது இஸ்மாயில் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக கே.ஆர். பில்டர்ஸ் ராஜகோபாலன், பழைய குற்றாலம் ஹில்டன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளித் தாளாளர் ஆர்.ஜே.வி. பெல், ஜமாலியா கன்ஸ்ட்ரக்ஷன் உரிமையாளர் ஜமால் முகமது அப்துல்லா பங்கேற்றனர். இதையடுத்து புதிய அலுவலகத்தை தென்காசி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் செல்வமோகன்தாஸ் பாண்டியன் எம்எல்ஏ திறந்துவைத்தார். ஜாஸ் பில்டர்ஸ் உரிமையாளர் பக்கீர் மைதீன், மீரான் மருத்துவமனை குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர் டாக்டர் அப்துல் அஜீஸ், தமிழ்நாடு என்.எல்.ஓ. துணைத்தலைவர் காங்கிரஸ் பொன் பாண்டியன், அட்வகேட் அசோசியேசன் செயலாளர் வக்கீல் புகழேந்தி, வக்கீல் முகமது இஸ்மாயில் சேட், மகாராஜா பைப் சென்டர் உரிமையாளர் எம்.எஸ். ஹாஜா முகைதீன், கே.பி.என். சாமில் உரிமையாளர் அப்துல்ரஹீம், திமுக தென்காசி நகரச் செயலாளர் சாதிர், ரூபி ஹார்டுவேர் உரிமையாளர் ஜலால், அதிமுக நகரச் செயலாளர் சுடலை, செங்கோட்டை முன்னாள் யூனியன் சேர்மன் முருகையா, வக்கீல் ரங்கராஜ், மாரியப்பன் முன்னிலை வகித்தனர்.