மதுரை : திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ளது தீபத்தூண் என்பதற்கு ஆதாரங்கள் இல்லை என்று அறநிலையத்துறை தெரிவித்துள்ளது. ஐகோர்ட் கிளையில் நடைபெற்று வரும் திருப்பரங்குன்றம் தீபம் தொடர்பான வழக்கில் ஆஜரான அறநிலையத்துறை, மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றியதற்கான ஆதாரங்கள் உள்ளதா என்றும் தீபம் ஏற்ற வேண்டும் என்று தனி நீதிபதி உத்தரவிட்ட தூண் போன்று சமண மலையிலும் உள்ளது என்றும் தெரிவித்தது.
