கெங்கவல்லியில் சமத்துவ பொங்கல் விழா

கெங்கவல்லி,  ஜன.19: கெங்கவல்லி அடுத்த நடுவலூர் பெரியார்  சமத்துவபுரத்தில், சமத்துவ பொங்கல் விழா நடந்தது. சேலம்  மாநகராட்சி முன்னாள் மேயர் ரேகா பிரியதர்ஷினி சிறப்பு விருந்தினராக  கலந்துகொண்டு, பொங்கல் வைத்து அனைவருக்கும் வழங்கினார். விழாவில் கெங்கவல்லி  ஒன்றிய பொறுப்பாளர் அகிலன், முன்னாள் ஒன்றிய செயலாளர் காமராஜ், ஒன்றிய  இளைஞரணி அமைப்பாளர் பிரகாஷ், முன்னாள் ஊராட்சி செயலாளர் செல்வம்,  அன்புரோஸ், கோபி, பேரூர் செயலாளர் பாலமுருகன், நடுவலூர் ஊராட்சி  செயலாளர்கள் மற்றும் கெங்கவல்லி ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.ெதாடர்ந்து சமத்துவபுரத்தில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து, கிழக்கு மாவட்ட திமுக இளைஞர் அணி அமைப்பாளர் வீரபாண்டி பிரபு,  இளைஞர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

Related Stories: