அறந்தாங்கி, ஜன.19: புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் பெய்த தொடர் மழையின் காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த 1 லட்சத்திற்கும் அதிகமான ஏக்கர் நிலப்பரப்பில் சாகுபடி செய்திருந்த நெற்பயிர்கள் தண்ணீர் மூழ்கி, நெல்மணிகள் முளைத்துவிட்டது. மார்கழி மாதம் பெய்த தொடர்மழையின் காரணமாக விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், விவசாயிகளின் துயர் துடைக்க தமிழக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்நிலையில் மார்கழி மாதம் பெய்த தொடர்மழையின் காரணமாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க கோரி அறந்தாங்கி அடுத்த எரிச்சியில் ஆலங்குடி எம்எல்ஏவும், அறந்தாங்கி வடக்கு ஒன்றிய திமுக செயலாளருமான மெய்யநாதன் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடந்தது.