கூடலூர், ஜன. 17: பென்னிகுக் பிறந்த நாளை முன்னிட்டு மக்கள் நீதி மய்யம் மாநில விவசாய அணி துணைச்செயலாளர் வேதா வெங்கடேஷ் தலைமையில், மாநிலச் செயலாளர் அழகர் (கட்டமைப்பு மதுரை மண்டலம்), இளைஞரணி மாநில துணைச்செயலாளர் பரணிராஜன், மகளிரணி மாநில துணைச்செயலாளர் பத்மாவதி உட்பட அக்கட்சியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் நேற்று முன்தினம் லோயர்கேம்ப் மணிமண்டபத்தில் உள்ள பென்னிகுக் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். முன்னதாக பொங்கல் வைத்து பொதுமக்களுக்கு வழங்கினர். அதையடுத்து பென்னிகுக்கின் 180வது பிறந்த நாளை முன்னிட்டு 180 மரக்கன்றுகள் நட்டனர்.