பழநி, ஜன. 17: பழநி மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் சில தினங்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் பழநி பகுதியில் உள்ள அணைகள், குளங்கள் நிரம்பியுள்ளன. இதனால், நீர்நிலைகளுக்கு வரும் உபரி நீர் அப்படியே திறந்து விடப்பட்டு வருகிறது. பழநி அருகே 80 அடி உயரமுள்ள குதிரையாறு அணை முழுவதும் நிரம்பி விட்டது. இந்த அணையில் இருந்து தற்போது அதிகளவிலான தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால், பூஞ்சோலை கிராமத்திற்கு செல்லும் தரைப்பாலம் அடித்து செல்லப்பட்டது. இக்கிராமத்தில் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். சுமார் 1,000 ஏக்கர் பரப்பளவில் விவசாய நிலங்கள் உள்ளன.